குரு வாழ்க ! குருவே துணை !!

ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள் ஈசனோ டாயினும் ஆசை அறுமின்கள் - திருமூலர்

Wednesday, April 23, 2008

வால்ட் விட்மன்

--------------------------------------------------------------------------------
மண்ணையும், சூரியனையும், பிராணிகளையும் நேசி! பணத்தை லட்சியம் செய்யாதே; கேட்கிறவனுக்கெல்லாம் கொடு!

அறிவில்லாதவர்கள் சார்பாகவும், பித்தர்கள் சார்பாகவும் போராடு!

உன் வருமானத்தையும், உழைக்கும் சக்தியையும் பிறருக்காக செலவிடு. யதேச்சதிகாரிகளை வெறு. கடவுள் குறித்து வாதிடாதே.

மக்களிடம் பொறுமையுடனும், சகிப்புத் தன்மையுடனும் நடந்து கொள்.

படிக்காத மேதைகளிடமும், தாய்மார்களிடமும் பழகு. பள்ளியிலோ, கோவிலிலோ, புத்தகத்திலோ உனக்குச் சொல்லப்பட்டவைகளை எல்லாம் மறுபரீசிலனை பண்ணு.

உன் ஆன்மாவை எதெல்லாம் அகரவுப்படுத்துகிறதோ, அதையெல்லாம் தள்ளிவிடு.

இப்படியெல்லாம் செய்தால் உன் சொற்கள் மட்டுமல்லாமல் உன் உதடு, முகம், கண்கள், உன் உடலின் அசைவு ஒவ்வொன்றிலும் கவிதை வெளிப்படும்.

-வால்ட் விட்மன் அமெரிக்க கவிஞர்
-----------------------------------------------------------------------------------

0 comments:

Post a Comment

கருத்தினைப் பதிவு செய்தமைக்கு மிக்க நன்றி.