குரு வாழ்க ! குருவே துணை !!

ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள் ஈசனோ டாயினும் ஆசை அறுமின்கள் - திருமூலர்

Saturday, April 26, 2008

டாலர் வீழ்ச்சியின் விளைவுகளும் காரணங்களும்

--------------------------------------------------------------------------------
அமெரிக்க டாலரில் ஏற்றுமதி வியாபாரம் செய்யும் ஏற்றுமதி நிறுவனங்கள் மிகப்பெரும் நஷ்டத்தை சந்தித்தன இந்த வருடம். விளைவு எண்ணற்றோர் வேலை இழந்தனர்.

வருட ஆரம்பத்தில் டாலரின் இந்திய மதிப்பு ரூபாய் 45 ஆக இருந்தது. ஆனால் அடுத்த சில மாதங்களில் டாலரின் இந்திய மதிப்பு ரூபாய் 40ஆக குறைந்தது. காரணம் என்ன ? உலகமெங்கும் டாலரின் மதிப்பு வீழ்ச்சி அடைந்திருந்த போது இந்தியாவில் மட்டும் டாலரின் மதிப்பு குறையாமல் இருந்ததுக்கான காரணம் என்ன ? என்ன நடந்தது ?

உலகமெங்கும் டாலரில் தான் வியாபாரம் செய்து வருகின்றனர். அதனால் டாலருக்கான தேவை எப்போதும் இருந்ததால் டாலரின் மதிப்பு குறையாமல் இருந்தது. டாலரின் மதிப்பு உயர்ந்து கொண்டே இருக்க காரணம் குரூடு ஆயில் என்ற பெட்ரோலிய பொருட்களின் ஏற்றுமதி, இறக்குமதி டாலரில் நடைபெற்றது தான் காரணம். சமீபத்தில் ஈரானின் டாலரில் எண்ணெய் ஏற்றுமதி செய்வது தடை செய்யப்பட்டதால் உலகமெங்கும் டாலரின் மதிப்பு வீழ்ச்சி அடைந்ததாக பொருளாதார நிபுணர்கள் கட்டுரைகளை பதித்து வந்தனர். ஆனால் வருட ஆரம்பத்தில் இந்தியாவில் மட்டும் டாலரின் மதிப்பு குறையாமல் இருந்து வந்ததில் ஒரு மர்மம் இருக்கவேண்டும் என்று எண்ணத் தோன்றும்.

டாலரின் மதிப்பு குறைந்ததால் என்ன விளைவுகள் ஏற்பட்டன இந்தியாவில் என்று பார்க்கலாம்.

ஒரு அமெரிக்க கம்பெனிக்கு , இந்திய ஏற்றுமதி நிறுவனம் 1000 டன் கத்தரிக்காயை ஏற்றுமதி செய்ய ஒரு டன் ரூபாய் 25,000 என்ற அளவில் ஆயிரம் டன்னுக்கு 25,00,000.00 ரூபாய்க்கு, 55,556.00 அமெரிக்க டாலருக்கு ஆர்டர் எடுத்து இருந்தது. அப்போது டாலரின் இந்திய மதிப்பு ரூபாய் 45.00 என்று வைத்துகொள்வோம்.

ஆர்டர் எடுத்த பிறகு எல்சி என்ற லெட்டர் ஆப் கிரடிட் என்ற முறையில் 1000 டன்னுக்கு உண்டான 55,556.00 அமெரிக்க டாலரை இந்திய கம்பெனிக்கு அமெரிக்க கம்பெனி வங்கி மூலம் பணம் செலுத்தி இருக்கும்.
ஆர்டர் வந்த பிறகு 45 நாட்களுக்கு கத்திரிக்காயை அனுப்பி விட்டு பில் ஆப் லேடிங் , இன்வாய்ஸ் மற்றும் இதர டாக்குமெண்டுகளை வங்கியில் கொடுத்தால் அவர்கள் 55,556.00 அமெரிக்க டாலருக்கு உண்டான இந்திய மதிப்பு ரூபாய் 25,00,000.00 கொடுப்பார்கள்.

அந்த சமயத்தில் தான் 45 ரூபாய் மதிப்பில் இருந்த டாலர் 40 ரூபாயாக திடீரென்று இந்தியாவில் மட்டும் குறைந்தது. ஏற்றுமதி செய்யப்பட்ட பிறகு வங்கியில் டாக்குமென்டுகளை செலுத்தும் போது டாலரின் மதிப்பு ரூபாய் 40 ஆக இருந்ததால் 2,77,560.00 ரூபாய் நஷ்டத்தை சந்தித்தார் ஏற்றுமதி செய்தவர். முடிவு எவரோ செய்யும் தவறுக்கு எவரோ ஒருவர் நஷ்டம் அடைகின்றார். டாலரின் வீழ்ச்சியால் ஒரு தனி மனிதர் அடைந்த நஷ்டம் கிட்டத்தட்ட மூன்று லட்சம். இது ஒரு உதாரணம் தான். இதைப்போல எண்ணற்ற கம்பெனிகள் நஷ்டம் அடைந்தன. திருப்பூரில் மட்டும் ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு நஷ்டத்தை சந்தித்தன ஏற்றுமதி நிறுவனங்கள் என்று தினசரிகளில் செய்திகள் வெளியிட்டு இருந்தனர். நஷ்டம் அடைந்த கம்பெனிகள் வேலை ஆட்களை குறைத்தனர். விளைவு வேலை இல்லாத் திண்டாட்டம். இப்போது டாலரின் வீழ்ச்சியால் உண்டான விளைவுகளை பார்த்தோம். இனி அதற்கு காரணம் என்னவாக இருக்கும் என்று பார்க்கலாம்.

இந்தியாவில் மட்டும் ஏன் இந்த நிலை வந்தது ? யார் செய்த தவறு இது ? யார் இதற்கு பொறுப்பு ஏற்கனும் ?

ஒவ்வொரு நாட்டுக்கும் அந்நிய செலவாணி முக்கியம். இன்று இந்தியாவிடமிருக்கும் கையிருப்பு கிட்டத்தட்ட 12 லட்சம் கோடி. எப்படி இவ்வளவு கையிருப்பு வந்தது ? கடந்த மாதங்களில் அந்நிய செலவாணி சந்தையில் அதிகமாக புழங்கப் பட்ட டாலரை ரிசர்வ் வங்கி சகட்டு மேனிக்கு வாங்கி குவித்தது. காரணம் நல்லது தான். ஏற்றுமதி அதிகமாகும்போது டாலர் விலை குறையாமல் இருக்க வேண்டுமென்ற எண்ணத்தால் வாங்கினாலும் இதனால் அதிக லாபம் அடைந்தது பங்குச் சந்தைக்குள் புகுந்த வெளிநாட்டு நிதி நிறுவனங்கள் தான். வெளிநாட்டு மூலதனம் தேவை என்று சகட்டு மேனிக்கு எழுதியும் பேசியும் வந்ததால் எடுக்கப்பட்ட தவறான முடிவுதான் இவ்வளவு விளைவுக்கும் காரணம்.
இப்படி டாலர் வாங்கி குவிக்கப்பட்டதால் டாலருக்கு செயற்கையான தட்டுப்பாடு ஏற்பட டாலரின் இந்திய மதிப்பு 45 ரூபாயாக குறையாமல் இருந்தது.

சரி டாலரின் இந்திய மதிப்பு திடீரென்று எப்படி வீழ்ச்சி அடைந்தது இந்தியாவில் என்று பார்த்தால்,

வெளிநாடுகளில் இருந்து வரும் டாலரை வாங்கும் போது அதற்கீடான மதிப்பில் இந்திய ரூபாயினை கொடுத்து தான் வாங்க வேண்டும். அந்த பணம் வங்கிகளில் குவிய குவிய வங்கிகள் பொது மக்களுக்கு கடன் வழங்க ஏகப்பட்ட ஏற்பாடுகளை செய்து கடன் கொடுத்து வந்ததால் பணவீக்கம் ஏற்பட்டு விலைவாசி உயர்ந்தது. இது பெரும் பிரச்சனையாக உருவெடுத்த போது ரிசர்வ் வங்கி டாலர் வாங்குவதை படக்கென நிறுத்திவிட டாலருக்கான கிராக்கி குறைய டாலர் விலை அதள பாதாளத்துக்குள் செல்ல விளைவு ஏற்றுமதியாளர்கள் நஷ்டப்பட்டனர்.

இயற்கையாகவே உலகமெங்கும் டாலர் விலை குறைந்து வரும் கால கட்டத்தில் செயற்கையாக டாலரின் விலையின் உயர்த்தி அதனால் உண்டான விளைவுகளால் டாலர் வாங்குவதை நிறுத்தியதால் டாலரின் இந்திய மதிப்பு குறைந்து ஏற்றுமதியாளர்கள் ஏகப்பட்ட நஷ்டங்களை சந்திக்க வைத்தது யார் என்று உங்களுக்கு சொல்ல வேண்டியது இல்லை என்று நினைக்கின்றேன்.

இந்த கட்டுரை 21.12.2007 அன்று பிசினஸ் லைன் என்ற தினசரியில் வந்த கட்டுரையின் உதவியால் எழுதப்பட்டது.