குரு வாழ்க ! குருவே துணை !!

ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள் ஈசனோ டாயினும் ஆசை அறுமின்கள் - திருமூலர்

Wednesday, April 23, 2008

நீதிமன்றம் - தீர்ப்புகள் - சில கேள்விகள்

--------------------------------------------------------------------------------
இறைவனுக்கு அடுத்த படியாக கருதப்படும் இடம் நீதிமன்றங்கள். நீதிபதிகள் இறைவனின் உருவமாகவே பார்க்கப்படுக்கிறார்கள் சாதாரணமான மக்களால்.பல குற்றவாளிகள் தப்பிக்கலாம் ஆனால் ஒரு நிரபராதி தண்டிக்கப்பட கூடாது என்பார்கள்.
நீதி மன்றம் குறித்து, எனக்குள் சில கேள்விகள்.

1. வக்கீல்களின் கட்சி சார்பு நிலைகளால் ஏற்படும் பாதிப்புகள் என்ன ?
2. காலம் கடந்து வழங்கப்படும் தீர்ப்புகள் என்ன விதமான தாக்கங்களை உருவாக்கும் ?
3. அரசியல்வாதிகளுக்கு எதிரான வழக்குகள் தாமதமாவது எதனால் ? அதை அனுமதிப்பது ஏன் ?
4. கீழ்கோர்ட்டில் ஒரு தீர்ப்பு, மேல் கோர்ட்டில் ஒரு தீர்ப்பு, சில சமயம் வழக்கு தள்ளுபடி ? ஏன் இந்த நிலை ? யாரால் ?
5. நீதிமன்ற உத்தரவுகளை புறக்கணிக்கும் அரசுகளை நீதிமன்றம் என்ன செய்யும் ?
6. ஒரு குற்றம். இரு பக்கமும் வக்கீல்களின் வாதம். ஆனால் யாராவது ஒருவர் குற்றத்துக்கு தண்டனை பெறுவார். அவருக்கு வாதாடின வக்கீலும் குற்றத்துக்கு துணை போனவர் தானே ? இவருக்கு ஏன் தண்டனை இல்லை ?

-----------------------------------------------------------------------------------